கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா கட்டுப்பாடு அறை மற்றும் சிகிச்சை மையத்தில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஆய்வு
கள்ளக்குறிச்சி மாவட்ட கொரோனா நோய் தடுப்பு மாவட்ட கண்காணிப்பு அலுவலர் சி சமயமூர்த்தி ஐஏஎஸ் அவர்கள் நீலமங்கலம் ஏகேடி கல்வி நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா சிகிச்சை மையத்தை நேரில் ஆய்வு செய்தார்.
பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் அமைக்கப்பட்டுள்ள 24 மணி நேர கொரோனா கட்டுப்பாடு மைய அறையினையும் அவர் பார்வையிட்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சித் தலைவர் கிரண் குராலா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்