கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி

கள்ளக்குறிச்சி மாவட்ட உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி அளிக்கப்பட்டது.

Update: 2021-10-05 07:46 GMT

பைல் படம்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தில் ஓட்டுஎண்ணும் பணியில் ஈடுபட உள்ள பணியாளர்களுக்கு ஒரு நாள் பயிற்சி நடந்தது. சங்கராபுரம் ஒன்றியத்தில்ஊரக உள்ளாட்சித் தேர்தல் வரும் 9 ம்தேதி நடக்கிறது.

பதிவான ஓட்டுகள் எண்ணும் பணி 12 ஆம் தேதி சங்கராபுரம் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியில் நடக்கிறது.

இப்பணியில் ஈடுபட உள்ள அரசு ஊழியர்களுக்கு ஒரு நாள் பயிற்சி  சங்கராபுரம் அரசுஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. பி.டி.ஓ.,க்கள் ராஜேந்திரன், ரவிச்சந்திரன் பயிற்சி அளித்தனர். பயிற்சியில் 370 பேர் பங்கேற்றனர்.

Tags:    

Similar News