கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சி ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம் இன்று நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் மாவட்ட வளர்ச்சி குறித்து ஆய்வு கூட்டம். பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் எ.வ.வேலு தலைமையில் தொடங்கியது.
இந்நிகழ்ச்சியில், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், விழுப்புரம் நாடளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் சங்கராபுரம் உதயசூரியன், ரிஷிவந்தியம் வசந்தம் கார்த்திகேயன், உளுந்தூர்பேட்டை மணிகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும், ஒன்றியக்குழு தலைவர்கள், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர்கள், மற்றும் அனைத்துத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். இதில் உளுந்தூர்பேட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் வைத்தியநாதன், மேற்கு ஒன்றிய செயலாளர் சேர்மன் ராஜவேலு, நகரச் செயலாளர் டேனியல் ராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.