கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் கடத்தியவர் தப்பியோட்டம்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் கடத்தியவர் தப்பியோடினார். கடத்தலுக்கு பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

Update: 2021-05-31 13:17 GMT

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் கடத்த பயன்படுத்திய வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் சாராயம் காய்ச்சப்படுவதாக கிடைத்த தகவலின் பேரில் போலீசார் அங்கு தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த இரு சக்கர வாகனத்தை போலீசார் நிறுத்திய போது  காவலரை கண்டு அந்த நபர் தப்பியோடினார். வாகனத்தை சோதனையிட்டபோது அதில்  கடத்தி வந்த 150 லிட்டர் கள்ள சாராயம் இருப்பது தெரியவந்தது.  கடத்தலுக்கு பயன்படுத்திய இருசக்கர வாகனத்தை  கைப்பற்றிய போலீசார் தப்பியோடிய நபரை தேடி வருகின்றனர். 

Tags:    

Similar News