கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை சூழ்ந்த வெள்ளம்: ஒன்றிய குழு தலைவர் ஆய்வு
கள்ளக்குறிச்சி அருகே சமத்துவபுரத்தை வெள்ளம் சூழ்ந்ததால் ஒன்றிய குழு தலைவர் ஆய்வு மேற்கொண்டார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கள்ளக்குறிச்சி அருகே சிறுவங்கூரில் உள்ள சமத்துவபுரத்தை மழைவெள்ளம் சூழ்ந்தது. இதனால் அங்குள்ள 100 வீடுகளில் வந்தவர்கள் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்தனர்.
இது பற்றி அறிந்தும் ஒன்றிய குழு தலைவர் அலமேலு, ஆறுமுகம் நேரில் சென்று சமத்துவபுரத்தை பார்வையிட்டு தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டார் அதன்படி 2 பொக்லைன் இயந்திரங்கள் வரவழைக்கப்பட்டு, வாய்க்கால் போல் ஏற்படுத்தி தண்ணீர் வெளியேற்றப்பட்டது.
அப்போது மாவட்ட ஊராட்சி உதவி இயக்குனர் மாதேஸ்வரன், வட்டார வளர்ச்சி அலுவலர நடராஜன், ரங்கராஜன், தாசில்தார் விஜயபிரபாகரன் பொறியாளர் சாமிதுரை, மாவட்ட தி.மு.க மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர் ஆறுமுகம், சிறுவங்கூர் ஊராட்சி மன்ற தலைவர் சந்திரா ஒன்றிய கவுன்சிலர் ரவிக்குமார் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.