விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல் படை காவலர் குடும்பத்திற்கு நிதியுதவி
கள்ளக்குறிச்சியில் விபத்தில் உயிரிழந்த ஊர்க்காவல்குடும்பத்திற்கு எஸ்பி., நிதியுதவி வழங்கினார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், செம்பியன்மாதேவி கிராமத்தை சேர்ந்த ஊர்காவல் படை வீரர் கமலக்கண்ணன் சில நாட்களுக்கு முன்பு தியாகதுருவம் அருகே செல்லும் சாலை விபத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
கமலக்கண்ணன் குடும்பத்தினருக்கு நிதி உதவி அளிக்க முன்வந்த மண்டல தளபதி வசந்தபாலன் மற்றும் அவருடன் பணிபுரியும் சக ஊர்காவல் படை வீரர்கள் சேர்ந்து தொகை 50,000 நிதி திரட்டினர்.
அதனை கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் கமலகண்ணன் குடும்பத்தினரை நேரில் அழைத்து எஸ்.பி ஜியாயுல்ஹக் நிதி உதவியை வழங்கி ஆறுதல் தெரிவித்தார்.