ஊரக உள்ளாட்சி தேர்தல் வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒதுக்கீட்டு பணி

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் ஒதுக்கீட்டு பணி மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் தலைமையில் நடைபெற்றது

Update: 2021-09-18 14:20 GMT

கள்ளக்குறிச்சியில் தேர்தல் அலுவலர் பணி ஒதுக்கீடு கணினி மூலம் மேற்கொள்ளப்பட்டது

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் இரண்டு கட்டங்களாக 06.10.2021 மற்றும் 69.10.2021 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. இத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு அலுவலர்கள் விபரம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது. அதனைத்தொடர்ந்து கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியங்களுக்கும் வாக்குப்பதிவு அலுவலர்களின் விவரங்கள் ஒதுக்கீடு செய்யும் முதல் சுழற்சி முறை (First Randomization) பணிகள் கனிணி மூலம் இணையத்தின் வாயிலாக 17.03.2021 அன்று மேற்கொள்ளப்பட்டது.

இதன் தொடர்ச்சியாக, இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் குழு தேர்வு செய்யும் பணி கணினி மூலம் இணையதளத்தின் வாயிலாக இன்று மேற்கொள்ளப்பட்டது. இந்நிகழ்வின்போது, திட்ட இயக்குநர் மரு.இரா.மணி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

Similar News