சின்னசேலம் அருகே பயிர் காப்பீடு முகாமை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
சின்னசேலம் அருகே பயிர் காப்பீடு முகாமை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று ஆய்வு செய்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் வட்டத்திற்குட்பட்ட எலியத்தூர் கிராமத்தில் பயிர் காப்பீட்டு சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சியர் பி.என்.ஸ்ரீதர் இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது பயிர் காப்பீடு தொடர்பான மனுக்களை விவசாயிகளிடம் இருந்து பெற்று, அனைத்து விவசாயிகளும் பயிர் காப்பீடு செய்து பயன்பெறுமாறு தெரிவித்தார்.