ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் தலைமையில் கலந்தாய்வு கூட்டம்
கள்ளக்குறிச்சியில் ஊரக வளர்ச்சி ஊராட்சித் திட்ட பணிகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
கள்ளகுறிச்சி மாவட்டம் மாவட்ட ஆட்சித் தலைவர் கூட்டரங்கில், ஊரக வளர்ச்சி ஊராட்சித் திட்ட பணிகள் மற்றும் வாழ்வாதார செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த கலந்தாய்வுக் கூட்டம் நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி தலைமை தாங்கினர்.
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்குனர் பிரவீன் பி. நாயர், தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவன மேலாண்மை இயக்குனர் திருமதி, மாவட்ட ஆட்சித் தலைவர் ஆகியோர் முன்னிலையில் இந்த கூட்டம் நடைபெற்றது.
இந்த கலந்தாய்வு கூட்டத்தில், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கலந்துகொண்டனர்.