க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடக்கம்

டெங்கு ஒழிப்பு முன்னெச்சரிக்கையாக க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்கள் சுத்தம் செய்யும் பணி தொடங்கப்பட்டது.

Update: 2021-11-13 13:40 GMT

க.அளம்பலம் கிராமத்தில் கால்வாய்களை சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. 

கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் அடுத்த க.அளம்பலம் கிராமத்தில் இன்று ஊராட்சி மன்ற தலைவர் ராஜாமணி மாரியாபிள்ளை தலைமையில் டெங்குவை ஒழிக்க முன்னெச்சரிக்கை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

கிராமத்தில் அமைந்துள்ள அனைத்து கால்வாய்களை  ஹிட்டாச்சி இயந்திரத்தை வைத்து சுத்தம் செய்யும் பணி நடைபெற்றது. இந்நிகழ்வின் ஊராட்சிமன்றத் துணைத் தலைவர் சூரியா அறிவழகன் மற்றும் அனைத்து வார்டு உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News