குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி

சின்னசேலத்தில் கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை தொழிலாளர் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2021-02-09 17:21 GMT

சின்னசேலத்தில், கள்ளக்குறிச்சி மாவட்ட காவல்துறை சார்பில் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்துவது தடுப்பதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

சின்னசேலம் ரயில் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் , கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலைய ஆய்வாளர் புவனேஸ்வரி தலைமை தாங்கினார். மாவட்ட குழந்தைகள் நல அலுவலர் முருகன் மற்றும் கள்ளக்குறிச்சி தொழிலாளர் துறை உதவி ஆய்வாளர் கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சின்னசேலத்தில் உள்ள கடைவீதி பஸ் நிலையம் கோயில்கள் போன்ற இடத்தில் பிச்சை எடுக்கும் குழந்தைகள், காணாமல் போன குழந்தைகள் மற்றும் குழந்தை தொழிலாளர்கள் ஆகியோர் மீட்டெடுத்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பது இத்திட்டத்தின் நோக்கமாகும் என விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

மேலும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை பற்றியும் குழந்தைகளை யாரும் பணிக்கு வைக்கக்கூடாது என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. இந்நிகழ்வின்போது சின்னசேலம் காவல் ஆய்வாளர் ராஜா உள்ளிட்ட போலீசார் உடனிருந்தனர்.

Tags:    

Similar News