பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபர் ஒருமணி நேரத்தில் கைது

பிரபல தொழில் நிறுவனத்தில் பட்டாகத்தியை காட்டி மிரட்டிய நபரை ஒரு மணி நேரத்தில் பிடித்த காவல்துறைக்கு பாராட்டுகள் குவிகிறது

Update: 2021-09-07 04:50 GMT

கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டும் சிசிடிவி காட்சி

திண்டுக்கல் பழனி ரோடு வசந்த் அன் கோ அருகே இருவர் கத்தியை காட்டி ஒருவரை மிரட்டி பின் அவரை வெட்டினர், மேலும்  கடையில் உள்ளே புகுந்து, கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றனர். 

இது குறித்து தகவலறிந்த எஸ்பி  சீனிவாசன் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன் பேரில், டிஎஸ்பி கோகுலகிருஷ்ணன் தலைமையில் காவல்துறையினர் கத்தியை காட்டி மிரட்டிய கோகுல் ராஜ் (24) மற்றும் குட்லி பிரபு(33) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை செய்கிறார்கள்.

சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் இருவரையும் கைது செய்த காவல்துறையினரை பொதுமக்கள் பாராட்டினர்.

Tags:    

Similar News