திண்டுக்கல் மாநகரில் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம்

தமிழகத்தில் நாளை முதல் முழு ஊரடங்கு அமல் படுத்தப் பட்டுள்ள நிலையில் திண்டுக்கல் மாநகரின் முக்கிய கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது

Update: 2021-05-23 11:40 GMT

திண்டுக்கல்லில் கொரோனா விபரீதம் அறியாத பொதுமக்கள் அதிகமாக கூடி பொருட்களை வாங்கி சென்றனர்.

கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நாளை முதல் தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அமல் படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது . இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் காய்கறிகள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்காக திண்டுக்கல் நகர் பகுதிகளில் மக்கள் அதிகளவில் கூடினர்.

இதன் காரணமாக திண்டுக்கல் அரசமரத்து வீதி, பெரியகடைவீதி, காட்டாஸ்பத்திரி அரசு மருத்துவமனை சாலை, மார்க்கெட் உள்ளிட்ட பகுதிகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

இதேபோல திண்டுக்கல் நகரின் மையத்தில் உள்ள காந்தி காய்கறி சந்தையில் மக்கள் கூட்டம் அலைமோதியது. சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் அதிகளவில் கூடிய மக்கள் காரணமாக நோய்த் தொற்று பரவும் அபாயமும் ஏற்பட்டது.


Tags:    

Similar News