திண்டுக்கலில் இறந்த இந்து பெண்ணின் உடலை எரியூட்டிய முஸ்லீம் அமைப்பினர்
திண்டுக்கல்லில் இறந்த இந்து பெண்ணின் உடலை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சார்பில் எரியூட்டப்பட்டது.
திண்டுக்கல் வேடபட்டி சேர்ந்தவர் புஷ்பா, 55. இவர் உறவினர்கள் புறக்கணித்தனர். இதனால் தனிமையில் வசித்து வந்தார். இந்நிலையில் கொரோனா தொற்று ஏற்பட்டு கடந்த ஒரு வாரமாக திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். சிகிச்சை பலனின்றி இறந்தார்.
இவரது உறவினர்கள் யாரும் உடலை வாங்க வர மறுத்தனர். இதையடுத்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை நிர்வாகம் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தை சேர்ந்த நல்லடக்க குழுவினரை நாடியது.
இந்த குழுவினர் புஷ்பாவின் உடலைப் பெற்று திண்டுக்கல் வேடபட்டி உள்ள மயானத்தில் இந்து முறைப்படி சடங்குகள் செய்து அவரின் உடலை எரியூட்டினர். இறந்த இந்து பெண்ணின் உடலை அவரது மத நம்பிக்கையின் அடிப்படையில் எரியூட்டிய முஸ்லிம் அமைப்பினரை பொதுமக்கள் பாராட்டுகின்றனர்.