திண்டுக்கல் பஸ் நிலையத்தில் ஓட்டல் தொழிலாளிக்கு கத்தி குத்து

திண்டுக்கல் பஸ் நிலையத்தில், ஹோட்டல் தொழிலாளிக்கு கத்தி குத்து; தொடரும் சம்பவங்களால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Update: 2021-09-24 01:44 GMT

திண்டுக்கலில், கடந்த ஒரு வாரத்தில் மட்டும் நான்கு கொடூர கொலை சம்பவங்கள், மூன்று கொலை முயற்சி சம்பவங்கள், பல்வேறு இடங்களில் கொள்ளை சம்பவங்கள் நடந்துள்ளன. இந்த நிலையில், நேற்றிரவும் இதுபோன்ற சம்பவம் தொடர்ந்தது.

புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியை சேர்ந்த ஹோட்டல் கூலி தொழிலாளி முத்து கணேசன் (34) என்பவரை, வேடசந்தூரில் வேலை முடித்துக்கொண்டு, பொன்னமராவதி செல்வதற்காக, திண்டுக்கல் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அப்போது, அடையாளம் தெரியாத இரண்டு நபர்கள், அவரை  கத்தியால் குத்தி பணம் பறிக்க முயன்று உள்ளனர்.

முத்துகணேசன், தான் வைத்திருந்த செல்போன் மற்றும் உடைமைகளை வீசிவிட்டு, உயிருக்கு பயந்து ஓட்டம் பிடித்து உள்ளர். அருகில் இருந்த பொதுமக்கள் கூச்சலிடவே, கொள்ளையர்கள் இருவர் தப்பி ஓடினர். படுகாயங்களுடன் முத்துகணேஷ், திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

திண்டுக்கலில், நாளுக்கு நாள் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கத்தி முனையில் வழிப்பறி நடை பெற்று வருவதால், பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.

Tags:    

Similar News