சென்னை விமான நிலையத்தில் சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகள் பறிமுதல்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.56.63 லட்சத்திற்கு சமமான சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

Update: 2021-12-20 14:19 GMT

பறிமுதல் செய்யப்பட்ட பணநோட்டுகள்

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினர் ரூ.56.63 லட்சத்திற்கு சமமான சௌதி, யூஏஇ, அமெரிக்க பணநோட்டுகளைப் பறிமுதல் செய்தனர்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறையினருக்கு கிடைத்த உளவுத் தகவல் அடிப்படையில் 17.12.2021 அன்று துபாய்க்கு செல்லவிருந்த விமானத்தின் 3 பயணிகளை சோதனை செய்த போது ரூ.14.45 லட்சம் மதிப்புள்ள சௌதியின் ரியால் பணநோட்டுகள் அந்நிய செலாவணி நிர்வாகச் சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன.

மற்றொரு சம்பவத்தில் கொழும்புக்கு செல்லவிருந்த விமானத்தின் 7 பயணிகளிடம் சோதனை செய்த போது ஆசனவாயில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 8 பணக்கட்டுகள் கைப்பற்றப்பட்டன.

ரூ.42.18 லட்சம் மதிப்புள்ள ஐக்கிய அரபு அமீரக திர்ஹாம் பணநோட்டுகள் மற்றும் அமெரிக்க டாலர் பண நோட்டுகள் அந்நிய செலாவணி நிர்வாக சட்டத்தின் கீழ் பறிமுதல் செய்யப்பட்டன என்று சென்னை சர்வதேச விமான நிலைய சுங்கத்துறை முதன்மை ஆணையர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

Similar News