தன்னம்பிக்கை அளித்து ஊக்கமளிக்கும் பாசிடிவ் மேற்கோள்கள்
நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்!
மனிதர்களில் பல விதம். ஒரு சிலர் அவர்களாகவே திட்டமிட்டு வாழ்வில் முன்னேறத்தை நோக்கி பயணித்துக்கொண்டேயிருப்பார்கள். ஆனால் ஒரு சிலருக்கோ அவர்களை ஒருவர் ஊக்கப்படுத்திக்கொண்டே இருக்க வேண்டும். ஊக்கப்படுத்துவதும் நேர்மறையான சிந்தனையோடு இருக்கவேண்டுமே தவிர தவறான ஊக்கமாக இருந்துவிடக்கூடாது. எதிர்மறை எண்ணங்களுக்கு எப்போதுமே வலு அதிகம்.
பாசிடிவ் எண்ணங்களோடு அவர்களை ஊக்கப்படுத்தும்போது அவர்களுடைய முயற்சியோடு இந்த ஊக்கமும் அவர்களுக்கு கை கொடுத்து வாழ்வில் பெரும் வெற்றியை அடைய செய்யும் என்பதில் மாற்று கருத்து இல்லை. அந்த வகையில் பாசிடிவ் எண்ணங்களோடுஊக்கப்படுத்தும் ஒரு சில வாசகங்கள் இதோ....
என்ன நினைக்கிறோமோ அதுதான் செயலில் வெளிப்படும். நல்ல எண்ணங்கள் நிச்சயம் நம்மை நல்வழிப்படுத்தும். ஆகவே நல்லதையே நினைப்போம் நல்லதையே செய்வோம்!
- உன்னை சுற்றி உள்ளவர்களை நீ மகிழ்ச்சியாக வைத்திருக்க விரும்பினால், முதலில் நீ மகிழ்ச்சியாக இரு! உன்னிடம் இல்லாத ஒன்றை நீ யாருக்கும் கொடுக்க முடியாது!
- தோல்வியில் இருந்து எதையும் கற்றுக் கொள்ளவில்லை என்றால், அதுதான் உண்மையான தோல்வி..!!
- நாம் எதை அதிகம் விரும்புகிறமோ அதற்கு நம்மை பிடிக்காமல் போகும்! இல்லையெனில், போக போக நமக்கே நம்மை பிடிக்காமல் போய்விடும்....
- காயங்களை குருதட்சணையாக வாங்கிக்கொள்ளாமல், காலம் யாருக்கும் எதையும் சொல்லிக் கொடுப்பதில்லை.
- எல்லோரும் பயணிக்கிறார்கள் என்று நீயும் பின்தொடராதே! உனக்கான பாதையை நீயே தேர்ந்தெடு...
- எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம், தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்
தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்
இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்
நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம்
ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்
தொடர்ந்து முயற்சி செய்து கொண்டே இருங்கள்!
தோல்வி கூட ஒரு நாள் நம்மிடம் தோற்றுவிடும்
- எத்தனை கைகள் என்னை தள்ளிவிட்டாலும் என் நம்பிக்கை என்னை கை விடாது
- இருளான வாழ்க்கை என்று கவலை கொள்ளாதே! கனவுகள் முளைப்பது இருளில் தான்
- சந்தேகத்தை எரித்துவிடு! நம்பிக்கையை விதைத்துவிடு! மகிழ்ச்சி தானாகவே மலரும்...
- ஒளியாக நீயிருப்பதால் இருளைப் பற்றிய கவலை எனக்கில்லை...
- பறப்பதற்கு வசதிகள் இருந்தாலும் தரையில் இருக்கவும் கற்றுக்கொள்...சிறகுகளை இழந்தாலும் வருந்தமாட்டாய்...
- நம்மை அவமானப்படுத்தும் போது, அந்த நொடியில் வாழ்க்கை வெறுத்தாலும் அடுத்த நொடியில் இருந்துதான் நம் வாழ்க்கையே ஆரம்பமாகும்.
- துன்பம் நம்மை சூழ்ந்த போதும் மேகம் கலைந்த வானமாய் தெளிவாகவே இருப்போம்...
- தனித்து போராடி கரைசேர்ந்த பின் திமிராய் இருப்பதில் தப்பில்லையே! எப்போதும் என் அடையாளத்தை யாருக்காகவும் விட்டு கொடுக்க மாட்டேன்
- முட்களையும் ரசிக்க கற்றுக்கொள்! வலிகளும் பழகிப்போகும்.
- அடுத்தவரோடு ஒப்பிட்டுஉன்னை நீயே தாழ்த்திக்கொள்ளாதே, உலகத்தில் பெஸ்ட் உனக்கு நீயே...
- பல முறை முயற்சித்தும் உனக்கு தோல்வி என்றால், உன் இலக்கு தவறு! சரியான இலக்கை தேர்ந்தெடு..
- வேதனைகளை ஜெயித்து விட்டால் அதுவே ஒரு சாதனைதான்...உன்னால் முடியும்என்று நம்பு...முயற்சிக்கும் அனைத்திலும் வெற்றியே...
- எந்த சூழ்நிலையையும் எதிர்த்து நிற்கலாம்! தன்னம்பிக்கையும் துணிச்சலும் இருந்தால்....
- குறி தவறினாலும் உன் முயற்சி அடுத்த வெற்றிக்கான பயிற்சி......
- ஒரு நாள் விடிவுகாலம் வரும் என்ற நம்பிக்கையில் தான் அனைவரின் வாழ்க்கையும் நகர்ந்துக்கொண்டிருக்கிறது...
- தோல்வி உன்னை துரத்தினால், நீ வெற்றியை நோக்கி ஓடு
- உறவுகள் தூக்கியெறிந்தால் வருந்தாதே! வாழ்ந்துக்காட்டு, அவர்கள் உன்னை தேடி வருமளவுக்கு...
- எல்லாம் தெரியும் என்பவர்களை விட, என்னால் முடியும் என்று முயற்சிப்பவரே வாழ்வில் ஜெயிக்கின்றார்...
- நமக்கு நாமே ஆறுதல் கூறும் மன தைரியம் இருந்தால் அனைத்தையும் கடந்து போகலாம்...
- முடியும் வரை முயற்சி செய்! உன்னால் முடியும் வரை அல்ல, நீ நினைத்ததை முடிக்கும் வரை...
- புகழை மறந்தாலும் நீ பட்ட அவமானங்களை மறக்காதே! அது இன்னொரு முறை நீ அவமானப்படாமல் காப்பாற்றும்
- தன்னம்பிக்கையை இழந்துவிடாதீர்கள்! இன்றைய தினம் கடினமாக இருக்கலாம்! நாளை மிக மோசமான தினமாக இருக்கலாம். ஆனால், நாளைய மறுதினம் நிச்சயம் பிரகாசமாக இருக்கும்
- எல்லோரிடமும் உதைபடும் கால்பந்தாய் இருக்காதே! சுவரில் எறிந்தால் திரும்பிவந்து முகத்தில்அடிக்கும் கைப்பந்தாயிரு.
- எண்ணங்களிலுள்ள தாழ்வுமனப்பான்மையால் திறமைக்கு தடை போடாதீர்கள் .முடியும் என்ற சொல்லே மந்திரமாய்.