வாழ்க்கை முழுதும் மகிழ்ச்சிப் பொங்கணுமா..? அப்ப மனைவியைப் போற்றுங்கள்..!

True Love Status For Husband-உண்மைக்காதல் என்பது உள்ளத்து அடியில் இருந்து வருவது. அது பிறர் தரமுடியாத அல்லது திருடமுடியாதப் பொக்கிஷம்.

Update: 2022-12-05 10:51 GMT

husband true love quotes-கணவனின் உண்மை அன்புக்கான மேற்கோள்கள்.

True Love Status For Husband-அன்பு வாழும் வரை காதலும் உயிர் வாழும். 'அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார் என்பும் உரியர் பிறர்க்கு' என்பது வள்ளுவன் கூற்று. அதாவது அன்பில்லாத நெஞ்சத்தை உடையவர், எல்லாமே தமக்கு உரிமை என்று நினைப்பார்கள். ஆனால், அன்பு உள்ளம் கொண்டவரோ, தம் எலும்பையும் கூட பிறருக்கு உரியதாக்கி மகிழ்ச்சி அடைவார்கள்.


அன்பிற்கு அடைக்கும்தாழ் இல்லை. அன்பு ஏதோ ஒரு வழியில் வெளிப்பட்டே தீரும் என்பது இதற்குப்பொருள். கணவன் மனைவி காதல் வரைமுறைக்கும், ஒப்பீட்டிற்கும் அப்பாற்பட்டது. அந்த காதல் புனிதமானது. ஒரு கணவனின் உண்மை அன்புக்கு ஈடு இணை இல்லை. இதோ உங்களுக்காக அன்பை வெளிப்படுத்தும் கணவனின் மேற்கோள்கள். படிங்க..!

  • உனக்கு நான் இந்த உலகைக் கொடுப்பேன். நானே உலகமாக இருப்பேன்.
  • என் இதயத்தின் இசை நீயே..! நீ எனக்கு வாழ்க்கை முழுதும் தொடரும் பாடல்..! அன்பால் உன்னை நனைக்கும் இசை நீ...நீ..!
  • இது ஆரம்பம் என்று நான் உணர்கிறேன், நான் உன்னை ஒரு மில்லியன் ஆண்டுகளாக நேசித்தாலும் கூட உன் மீதான அன்பு தீராது..! ஏனெனில் நீ என் வாழ்க்கைக்கான சூரிய ஒளி..!
  • நீங்கள் இல்லாத காதலும் ஒரு காதலா..? நீ இல்லையெனில் காதலே இல்லை..!
  • இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், நீ என் அருகில் இருக்கும்போது நான் இன்னும் எல்லாவற்றையும் உணர்கிறேன். இன்னும் இளைய காலத்து வாழ்க்கை காதலின் சுவடுகளாக தொடர்கிறது..!
  • உன் இதயத்தில், ஒவ்வொரு இரவிலும் அந்த நாளின் தொடக்கத்தைக் நான் காண்கிறேன். உன் கண்களில் நான் தொலைந்து போகிறேன்..உன் பார்வைகளில்..!
  • நான் உன்னைப் பெறவில்லை என்றால் எனக்கு ஒன்றும் இல்லை..! எனக்கான வாழ்க்கையே நீதான்..!
  • நான் உன்னுடன் தனியாக இருந்த காலமெல்லாம் இன்னும் என் நினைவில் நிழலாடுகிறது..நான் மீண்டும் வீட்டில் இருப்பதைப் போல என்னை உணரவைக்கிறாய்..உன்னை விட்டு தூர தேசத்தில் இருந்தாலும்..!
  • என் மார்புக் கூட்டுக்குள் இருந்து என் இதயம் துடிக்கிறது..ஒவ்வொரு நொடியிலும் உன் பெயர் சொல்கிறது..!
  • நீ என் கிரீடம்..என் இதய ராஜ்யத்தின் ராணி..! நாம் இருவரும் சேர்ந்து ஆள்வோம் வாழ்க்கை எனும் அரசாட்சியை..!


  • நான் முற்றிலும் உனக்கானவள்..நான் தூங்கும்போதும் என் கனவில் தோன்றும் நிஜமானவன் ..!
  • நான் உன் முகத்தைப் பார்க்கும்போது, ஏனோ என் தாயின் முகமே நினைவுக்கு வருகிறது..நீயும் என் தாயின் மறு உருவே..! என் தாய் எனக்கு உயிர் தந்தவள்..! நீயோ எனக்கு புதிய உயிரைத் தந்தவள்..!
  • என் கையைப் பிடித்து அக்னி வலம் வந்தவனே..இந்த நாளே உனக்கு முழுமையாக என்னைக் கொடுக்கும் நாள்..ஈருயிர் ஓருயிராக வாழும் நாள்..! உனக்கு நானும் எனக்கு நீயும் என்றாகும் நாள்..!
  • நீ உண்மையாக இருக்கிறாய் என்பது உன் கண்களில் தெரிகிறது..! நீ உன்னை மெய்ப்பிக்கத் தேவையில்லை..!
  • உன்னை ஆச்சர்யப்பட வைக்கும் உன்னத நாளை நான் எதிர்பார்த்திருந்தேன்..அந்த நாள் நம் திருமண நாள்..! காதல் தன் அன்பை உலகுக்கு காட்டும் நாள்..! உனக்கும் எனக்குமான காதலை பகிரங்கப்படுத்தும் உன்னத நாள்..!


  • உன் பார்வை ஒன்றே போதுமானது இந்த உலகை மறந்து போகிறேன்..உன்னைத்தவிர எனக்கு வேறு உலகம் இல்லை என்பதாகத் தோன்றுகிறது..!
  • குளிரான நாட்களில் ஏனோ உந்தன் உஷ்ணக்காற்று எனக்கு வேண்டும் என்கிறது மனசு..! நீ தூரதேசம் சென்றுள்ளாய் என்பது தெரிந்தும்..!
  • நீ ஒவ்வொரு நாளும் என்னை புதிதாய் உணர வைக்கிறாய்..! நீ எனக்கு ஒரு வாழ்க்கைப் புத்தகம்..! அனுபவங்களுடன் வாழ்க்கையை வாழக் கற்றுத்தருகிறாய்..! அதில் உன் நேசர்கள் மட்டுமே உயர்ந்து கிடக்கிறது..!
  • நாம் இங்கு இதயங்களை மாற்றிக்கொண்டோம்..ஆமாம்..நான் உன்னிலும்..நீ என்னிலும் இருக்கிறோம்..!இடம் மாறிய இதயங்கள்..காதலின் மகத்துவம்..!
  • நீ இருக்கும் இடத்தில் வேறு யாரும் வந்துவிட முடியாது..யாரும் உன் இடத்தை நிரப்பிவிட முடியாது..! நீ என் இதயத்து காதலுக்காகவே பிறந்தவன்..!


  • நான் என்ன நினைத்தேனோ அதுவே நீயும் நினைத்தாய்..! நீ என்ன நினைத்தாயோ அதையே நானும் நினைத்தேன்..! இதுதான் கூடு மாறிய வித்தையோ..!?
  • நீ, நான் என்பது நாம ஆகலாம்..அது வாழ்க்கைக்கானது..ஆனால் நீ, நான் என்ற ஈருயிர் ஓருயிர் ஆகவேண்டும்..! சேர்ந்தே இருப்பதே இனி நமக்கான வாழ்க்கை..! ஒரு கணமேனும் பிரியவேண்டாம்..!
  • இந்த உலகத்தின் எத்தனை பேர் இருந்து என்ன பயன்.? எனக்கான துன்பங்களை உன்னோடு மட்டுமே பகிர ஆசைப்படுகிறேன்..!
  • நான் உன்னை நேசிக்கிறேன். உன்னை பார்த்த நொடி முதல் உன்னை காதலிக்கிறேன். நான் உன்னைப் பார்ப்பதற்கு முன்பே உன்னைக் காதலித்திருக்கலாம் என்று கூட மீண்டும் காதல் மேல் கோபம் கொள்கிறேன்..ஏன் உன்னை முன்னரே காட்டாமல் விட்டாய் என்று..!
  • நம் ஆன்மா எதனால் உண்டானது என்று எல்லோரும் உணர்கிறார்களோ அதில் இருந்து நமக்கான ஆன்மா வேறுபட்டது..ஆமாம் நீ நினைப்பதே எனக்கும் ஆனது..நான் நினைப்பதே உனக்கும் ஆனது..!


  • உனக்குள் என்னை நான் கண்டுபிடிக்கவில்லை என்றால், நீ என்னைக் கண்டுபிடித்திருக்க மாட்டாய்..! ஏனெனில் நான் உனக்குள் ஆரம்பத்திலிருந்தே இருக்கிறேன். அங்கு தான் நான் என்னை கண்டுகொண்டேன்..!
  • நீ இல்லாத விடியல் கூட இன்னும் விடியாத பொழுதாகவே இருக்கிறது..! என் இதயத்து சூரியனே நீ தானே..!
  • இது முதல் பார்வையில் கிடைத்த காதல்..இதற்கு கடைசிப்பார்வை என்ற இறுதி கிடையாது..ஆமாம் நாம் இருவரும் மறையாதவரை அது முடியாத முதல் பார்வையே..!
  • என் இதயம் எப்போதும் உன்னுடையதாகவே இருக்கும். வெறும் கூடு மட்டுமே என்னிடம் இருக்கும், நீ இல்லாத தருணங்களில்..!
  • காதல் இல்லாத வாழ்க்கை பூக்காத மரத்தைப்போன்றது..! அங்கு பறவையினங்கள் வந்து உட்காராது..குழந்தைகள் இல்லாத வீடுகள் போல..!
  • நீ இல்லாமல் என் கனவு கூட முழுமையடையாது. கண் மூடினால் வருவது நீ மட்டுமே..ஒரு உலகமே விரிகிறது, என் கண்களுக்குள்..அங்கு நீயும் நானும் ராஜா ராணியாக..!



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News