நாட்டின் 14-வது குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கர் பதவியேற்பு
குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, குடியரசு துணைத்தலைவராக ஜெகதீப் தன்கருக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்
இந்தியாவின் 14வது குடியரசு துணைத்தலைவராக மேற்கு வங்க முன்னாள் கவர்னர் ஜக்தீப் தன்கர் பதவியேற்றார். ராஷ்டிரபதி பவனில் நடந்த விழாவில், குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தன்கருக்கு (71) பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
தன்கர் கடவுள் பெயரில் இந்தியில் உறுதிமொழி ஏற்றார். இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, முன்னாள் குடியரசு துணைத்தலைவர் எம்.வெங்கையா நாயுடு உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.