டீசல் பயன்பாடற்ற விவசாயம்: மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தல்

2024-ம் ஆண்டுக்குள், டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு அனைத்து மாநிலங்களும் முயற்சி எடுக்க வேண்டும் -மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தல்

Update: 2022-05-25 12:54 GMT

மத்திய மின்சாரம், புதுப்பிக்க எரிசக்தித்துறை அமைச்சர் ஆர்.கே.சிங், அனைத்து மாநில முதலமைச்சர்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் துணைநிலை ஆளுநர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

அப்போது, எரிசக்தித்துறையில் மாற்றத்தை ஏற்படுத்த மாநில அளவிலான வழிகாட்டுதல் குழுக்கனை அமைக்குமாறு கேட்டு கொண்டார். இந்த வழிகாட்டுதல் குழுக்கள் அந்தந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தலைமை செயலாளர்கள் தலைமையின்கீழ் செயல்படும் என்று அமைச்சர் ஆர்.கே.சிங் கூறினார்.

கரியமில வாயு உமிழ்வை குறைக்க ஆற்றல் மாற்றம் ஒன்றே சிறந்தவழி என்றும், அதிகரித்து வரும் மின்சாரத் தேவையை பூர்த்தி செய்ய மின்உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க ஆற்றலை சேர்க்க வேண்டும் என்றும் அமைச்சர் ஆர்.கே.சிங் தெரிவித்தார்.

விவசாயத் துறையில் டீசல் பயன்பாட்டை கட்டுப்படுத்துவதன் மூலம் வரும் 2024-ம் ஆண்டுக்குள், டீசல் பயன்பாடற்ற விவசாயத்துக்கு அனைத்து மாநிலங்களும் முயற்சி எடுக்க வேண்டும் என மத்திய அமைச்சர் ஆர்.கே.சிங் வலியுறுத்தினார்.

Tags:    

Similar News