விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்து கிடந்த பச்சிளங் குழந்தையின் சடலம் மீட்பு

விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்த பச்சிளங் குழந்தையின் சடலத்தை கண்டெடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர்.

Update: 2021-07-13 15:56 GMT

விளாப்பாக்கத்தில் கிணற்றில் மிதந்த பச்சிளங்குழந்தையின் சடலத்தை கண்டெடுத்து போலீஸார் விசாரணை செய்து வருகின்றனர். குழந்தை பிறந்து  சில நாட்களிலேயே சடலமாக கிணற்றில் மிதந்த அவலம். இராணிப்பேட்டை மாவட்டம் , ஆற்காடு அடுத்த விளாப்பாக்கம் கிராமத்தில் கிருஷ்ணன், என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் பிறந்து சிலநாட்களேயான பச்சிளங்குழந்தையின் சடலம் மிதந்து கொண்டிருப்பதாக , அப்பகுதி மக்கள்  திமிரி போலீசாருக்குத் தகவல் தெரிவித்தனர்.

அதன்பேரில், அங்குச் சென்ற போலீஸார்   குழந்தை பிறந்து சில நாட்களே ஆன  பச்சிளங்குழந்தைசடலமாக கிணற்றில் மிதந்து கிடப்பதை  கண்டனர். உடனே ஆற்காடு தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தந்தனர். அதன்பேரில் வந்த மீட்பு படையினர் குழந்தையின் சடலத்தை மீட்டெடுத்து போலீஸாரிடம் ஒப்படைத்தனர். பின்னர்,  சடலத்தை பிரேத பரிசோதனைக்கு ஆற்காடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததைத்தொடர்ந்து திமிரி போலீஸார் , வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

Tags:    

Similar News