துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்ற சீரியல் நடிகை நட்சத்திரா நாகேஷ்

துருக்கி நாட்டிற்கு சுற்றுலா சென்ற சீரியல் நடிகை நட்சத்திரா நாகேஷ் அங்கு எடுக்கப்பட்ட படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

Update: 2023-06-02 14:14 GMT

சீரியல் நடிகை நட்சத்திரா நாகேஷ்.

சீரியல் நடிகை நட்சத்திரா நாகேஷ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துருக்கி சுற்றுலா படங்களை பதிவிட்டு உள்ளார்.

தமிழ் திரை உலகிற்கு நிகராக தொலைக்காட்சிகளில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்கள் மக்களின் மனதில் குறிப்பாக பெண்களின் மனதில் முக்கிய இடம் பிடித்துள்ளது. இதன் காரணமாக சினிமா நடிகைகளுக்கு நிகராக சின்னத்திரை நடிகைகளும் தங்களது நடிப்பிற்கு ஏற்ப தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி  வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

அந்த வகையில் ஸ்டார் விஜய் தொலைக்காட்சியில் கடந்த 2021 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 12ம் தேதி முதல் ஒளிபரப்பாகி வரும் தமிழும் சரஸ்வதியும் தொடர் பெண்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்துள்ளது.திங்கள் முதல் வெள்ளி வரை ஒளிபரப்பாகி வரும் இத்தொடருக்கு என்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது.


இந்த தொடரில் தமிழ் ஆக தீபக் தின்கரும், சரஸ்வதியாக நடிகை நட்சத்திரா நாகேஷம் நடித்து வருகிறார்கள். அடுத்து என்ன நடக்கப் போகிறது என்கிற எதிர்பார்ப்போடு தினமும் இத்தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இத்தொடரின் நாயகி நட்சத்திரா நாகேஷ் தீபக் தின்கருடன் துருக்கி நாட்டிற்கு  சுற்றுலா சென்றுள்ளார். சுற்றுலாவில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் கண்டு களித்த இடங்கள் பற்றிய புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அருவியில் குளிப்பது, முக்கிய சுற்றுலா தளங்களில்  சேர்ந்து எடுத்த புடைப்படங்கள் என விதவிதமாக அவர் எடுத்த படங்கள் தற்போது வைரலாக பரவி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் அவரது படத்தை பார்த்த ரசிகர்கள் நட்சத்திராவுக்கு வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துள்ளனர். பல்வேறு கோணங்களில் அவர் எடுத்து உள்ள புகைப்படங்கள் சீரியல் ரசிகர்களின் மத்தியில் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

Tags:    

Similar News