பாண்டியன்ஸ்டோர்ஸில் சேரும் அண்ணன் தம்பிகள்! எதிர்பார்த்த திருப்பம் வந்தது!
Pandian Stores Promo This Week-பாண்டியன் ஸ்டோர்ஸில் இந்த வாரம் அண்ணன் தம்பிகள் சேரும் எபிசோடுகள் நிகழ இருக்கின்றன
Pandian Stores Promo This Week-ஆளுங்களை அடித்ததாக புகார் கொடுத்து கதிரை உள்ளே தள்ளிவிட்ட நிலையில், மூர்த்தி அவர்களிடம் சென்று தன் தம்பியை விடுவிக்க அவன் மீது போட்ட வழக்கை திரும்ப பெறுங்கள் என்று கெஞ்சிப் பார்க்கிறான். ஆனால் அதற்கு பிடிகொடுக்காமல் பேசும் முதலாளி, 5 லட்சம் ரூபாய் தரவேண்டும் என நஷ்டஈடு கேட்கிறார். இதனால் மூர்த்தி இந்த பணத்தை ஏற்பாடு செய்ய திட்டமிடுகிறான்
கதிரை விடுவிக்க தனம் அண்ணியும், முல்லையும் தங்களை நகைகளைக் கழற்றிக் கொடுக்கிறார்கள். பின் எப்படியோ 5 லட்சம் ரூபாய் பணத்தையும் சேர்த்துவிட்டு அங்கு சென்று ஒப்படைத்துவிட்டு பின் காவல் நிலையம் சென்று தம்பியை மீட்டுக் கொண்டு வருகிறார் மூர்த்தி. கதிரைப் பார்த்ததும் கண் கலங்கி நிற்கிறான் ஜீவா. கதிர், ஜீவா, மூர்த்தி மூவரும் கட்டியணைத்துக் கொண்டு நிற்க அங்கே கண்ணனும் வருகிறான். மறைந்து நின்று சற்று தூரத்திலிருந்து பார்க்கிறான். தம்பிகள் மூவரும் இணைவது போல மூர்த்தி எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2