பாரதி கண்ணம்மா 2வது பாகம், சீரியலில் ஹீரோ இவரா?

Bharathi Kannamma Hero-பாரதி கண்ணம்மா 2வது பாகம், சீரியலில் ஹீரோவாக சிப்பு சூரியன் நடிப்பதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Update: 2023-02-02 08:16 GMT

Bharathi Kannamma Hero

Bharathi Kannamma Hero-விஜய் தொலைக்காட்சியில், படு ஹிட்டாக ஒளிபரப்பாகி வந்த தொடர் 'பாரதி கண்ணம்மா'. அருண் மற்றும் ரோஷினி நாயகன்-நாயகியாக நடிக்க தொடங்கப்பட்ட தொடருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருந்தது. பின் கதையில் கொஞ்சம் இயக்குனர் தடுமாற, தொடரும் இடையில் டல் அடித்தது. கடைசியில் ஒருவழியாக முடிவுக்கு கொண்டு வந்துவிட்டனர்.

இந்த நேரத்தில், 'பாரதி கண்ணம்மா' தொடரின் 2ம் பாகம் பற்றிய பேச்சு இன்ஸ்டாக்ராமில் தொடங்கியுள்ளது. தற்போது இந்த 2வது சீசனில் சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான ரோஜா தொடரில் நாயகனாக நடித்த சிபு சூரியன், இதில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. பாரதிகண்ணம்மா சீரியலின் முதல் பகுதி இறுதி அத்தியாயத்தை நோக்கி ஒளிபரப்பாகி வருகிறது.

முதல் பகுதி இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கும் நிலையில் இரண்டாவது பகுதி தொடங்குவது குறித்து, அந்த சீரியலின் இயக்குனர் பிரவீன் பென்னட் ஆலோசித்து வருகிறார். 

பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது பகுதியில் யார் கதாநாயகன் கதாநாயகி யாராக இருக்கும் என, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரிக்க துவங்கி விட்டது. 

விஜய் டிவியில் நான்கு ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வரும் பாரதி கண்ணம்மா சீரியல் இன்னும் ஒரு சில நாட்களில் முடிவடைய இருக்கிறது. இந்த சீரியல் எப்போது முடிவடையும் என்று நெட்டிசன்கள் ஆரம்பத்தில் இருந்தே கேள்வி எழுப்பி வந்தனர். இந்த சீரியலின் கதை ஒரே ஒரு மையக்கருத்தைக் கொண்டே இருந்து வருகிறது என்று அதிகமானோர் இதை கலாய்த்து கொண்டிருந்தாலும், இந்த சீரியலுக்கும் அதிகமான ரசிகர்கள் இருந்து தான் வந்தனர். அதனால்தான் இந்த சீரியல் டிஆர்பியில் முதலிடத்தில் இருந்து வந்தது.

இந்நிலையில், தற்போது நெட்டிசன்கள் எதிர்பார்த்தபடியே இந்த சீரியல் கடைசி கட்டத்தை எட்டி இருக்கிறது.

முதல் பாகம் முடிவடைய இருக்கும் நிலையில், இரண்டாவது பாகம் தொடங்க இருக்கிறது என்ற தகவல்களும் தற்போது பரவி வருகிறது. அதைத்தொடர்ந்து இந்த சீரியலில் இயக்குனர் பிரவீன் பென்னட் இரண்டாவது சீசனின் கதையையும் இயக்குனராக தொடங்க இருக்கிறார் என்பதை தற்போது அவர் வெளியிட்ட புகைப்படத்தின் மூலமாகவும், பதிவு மூலமாகவும் ரசிகர்கள் உறுதி செய்திருக்கின்றனர்.

பாரதி கண்ணம்மா சீரியலின் இரண்டாவது சீசன் தொடங்கலாமா? என்று இயக்குனர் பிரவீன் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ஸ்டோரி சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

அது மட்டுமில்லாமல் பிரவீன் பென்னட் ஒரு நடிகரும், நடிகையும் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, 'பாரதி கண்ணம்மா' சீரியலின் இரண்டாவது சீசனின் ஜோடி யாராக இருக்கும் கண்டுபிடிங்கள் என்று பதிவிட்டு சில நிமிடங்களில் அந்த புகைப்படத்தையும் டெலிட் செய்திருக்கிறார். ஆனால் இதை ஒரு சில ரசிகர்கள் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தற்போது அது சமூக வலைத்தளத்தில் அதிகமாக பகிரப்பட்டு வருகிறது. எதற்காக இயக்குனர் பிரவீன் பதிவிட்ட புகைப்படத்தை டெலிட் செய்தார் என்று ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப இன்னும் ஒரு சில ரசிகர்கள், இது அவராக இருக்குமோ அல்லது இவராக இருக்குமோ என்று பல்வேறு நடிகர் நடிகைகளின் பெயர்களை கூறி வருகின்றனர்.

அந்த வகையில் சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா சீரியலில் கதாநாயகனாக அர்ஜுன் கேரக்டரில் நடித்த சிபு சூர்யன் மீண்டும் இந்த இரண்டாவது சீசனில் கதாநாயகனாக இருப்பாரோ என்றும் அல்லது சீரியல் நடிகர் விஷ்ணு இருக்குமோ என்றும் ஒரு தரப்பினர் கேள்வி எழுப்ப, அந்த பிளர் செய்யப்பட்டு இருக்கும் புகைப்படத்தில் இருக்கும் நடிகையின் சாயல் பார்ப்பதற்கு ஈரமான ரோஜாவே சீரியலில் கதாநாயகி பவித்ரா ஜனனி போல இருக்கிறது என்று பலர் கூறி வருகின்றனர். அல்லது சன் டிவியில் ஒளிபரப்பான பூவே உனக்காக சீரியலின் கதாநாயகியாகவும் இருக்க வாய்ப்பு இருக்கிறது என்று பலர் தங்களுடைய கருத்துக்களை தொடர்ந்து வெளியிட்டு வருகின்றனர்.

இந்த நேரத்தில் பாரதி கண்ணம்மா தொடரின் 2ம் பாகம் பற்றிய பேச்சு இன்ஸ்டாகிராமில் தொடங்கியுள்ளது. தற்போது இந்த 2வது சீசனில் சன் தொலைக்காட்சியின் ஹிட் சீரியலான ரோஜா தொடரில் நாயகனாக நடித்த சிபு, இதில் ஹீரோவாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2


Tags:    

Similar News