நடிகை ரம்பாவுக்கு சென்னையில் பெரிய தொழிற்சாலை.. குடும்பத்துடன் புகைப்படம் வைரல்
Rambha Family - சென்னையில் உள்ள தனது தொழிற்சாலையில் நடிகை ரம்பா குடும்பத்துடன் உள்ள புகைப்படங்கள் வெளியிட்டுள்ளார்.
Rambha Family - - நடிகை ரம்பா தனது இயற்பெயரான விசயலட்சுமியை திரைப்படத்திற்காகத் பெயரை மாற்றி முதலில் அம்ரிதா எனவும், பின்னர் ரம்பா எனவும் வைத்துக்கொண்டார்.
அவர் ஆந்திர மாநிலம் விசயவாடாவைச் சேர்ந்தவர். அவர் தெலுங்கு, தமிழ், மலையாளம், இந்தி, கன்னடம், பெங்காலி மற்றும் போஜ்புரி மொழிகளில் பல வெற்றித் திரைப்படங்களில் நடித்துள்ளார். கலைஞர் தொலைக்காட்சியின் வெற்றி நிகழ்ச்சியான 'மானாட மயிலாட' நிகழ்ச்சியின் நடுவராக பங்குபெற்று புகழ் பெற்றார்.
மேலும் 90களில் தமிழ் திரையுலகில் பெரும் ரசிகர் பட்டாளத்தையே அவர் வைத்திருந்தார். கடந்த 2010ம் ஆண்டு இந்திரகுமாரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். அவர்களுக்கு தற்போது இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர்.
அவரது இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருந்து வரும் நடிகை ரம்பா, தனது குடும்ப புகைப்படங்கள் அவ்வப்போது வெளியிட்டு வருகிறார்.
இந்நிலையில், சென்னையில் நடிகை ரம்பாவுக்கு சொந்தமான தொழிற்சாலையில் தனது குடும்பத்துடன் இருக்கும் புகைபடங்களை வெளியிட்டுள்ளார். நடிகை ரம்பாவின் கணவர் இந்திரகுமார் கனடா நாட்டைச் சேர்ந்தவராக இருந்தாலும் சென்னையில் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். அதில் சமையல் உபகரணங்களை தயாரித்து வருகிறது.
சமீபத்தில் ரம்பா அவரது குடும்பத்துடன் அந்த தொழிற்சாலைக்கு சென்றுள்ளார். அங்கு எடுத்த போட்டோக்களை இன்ஸ்டாகிராமில் அவரே வெளியிட்டுள்ளார். அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது.
அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2