சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து

Update: 2021-02-13 06:16 GMT

சிவகாசி அருகே காக்கிவாடன்பட்டியில் உள்ள பட்டாசு ஆலையில் வெடிவிபத்து ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே கிருஷ்ணசாமி என்பவருக்கு சொந்தமான பட்டாசு ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த பட்டாசு ஆலையில் 70க்கும் மேற்பட்டோர் இன்று காலை பணியாற்றி கொண்டிருந்தனர். வெடிமருந்து கலவைகளை உள்ளே செலுத்த முற்பட்டபோது எதிர்பாராதவிதமாக வெடி விபத்து ஏற்பட்டுள்ளதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. இந்த வெடி விபத்தில் சுரேஷ் என்பவர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டிருக்கிறார். நேற்று பட்டாசு விபத்து ஏற்பட்டு பலர் காயமடைந்த நிலையில் இன்று இந்த விபத்து நடைபெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News