திருத்தணி முருகன் கோயில் உண்டியல் திறப்பு: ரூ 1 .22 கோடி பக்தர்கள் காணிக்கை

1 கோடியே 22 லட்சத்து 3 ஆயிரத்து 132 ரூபாய் பணம், 795 கிராம் தங்கம், 14 கிலோ 495 கிராம் வெள்ளி ஆகியவை செலுத்தியுள்ளனர்

Update: 2023-06-17 05:00 GMT

திருத்தணி சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணியில் ஈடுபட்ட ஊழியர்கள்

திருத்தணி முருகன் கோயிலில் கடந்த 25 நாட்களில் சாமி தரிசனம் செய்த பக்தர்கள் 1 கோடியே 22 லட்சத்து 3 ஆயிரத்து 132 ரூபாய் பணம், மற்றும் 795 கிராம் தங்கம், 14 கிலோ 495 கிராம் வெள்ளி ஆகியவை உண்டியல் காணிக்கையாக செலுத்தியதாக கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் உள்ள ஆறுபடை வீடுகளில் ஐந்தாம் படை வீடாக திகழும் அருள்மிகு சுப்ரமணிய சுவாமி திருக்கோயிலில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம் செய்து வருகிறார்கள். அதே போல் கிருத்திகை மற்றும் விசேஷ நாட்களிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தங்கள் வேண்டுதலை நிறைவேற்ற வருகை தந்து முருகனை தரிசித்துவிட்டு காணிக்கையை செலுத்திவிட்டு செல்கின்றனர்.

இதனையடுத்து திருத்தணி முருகன் திருக்கோயில் மலைக்கோயிலில் உள்ள தேவர் மண்டபத்தில் கோயில் ஊழியர்களின் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. அதன்படி கடந்த 25 நாட்களில் 1 கோடியே 22 லட்சத்து 3 ஆயிரத்து 132 ரூபாய் பணம் மற்றும் 795 கிராம் தங்கம், 14 கிலோ 495 கிராம் வெள்ளியும் உண்டியல் காணிக்கையாக கிடைக்கப்பெற்றதாக கோயில் நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.


Tags:    

Similar News