திருத்தணி ரயில்வே சுரங்க பாதையினை சுத்தம் செய்த துப்புரவு பணியாளர்கள்!

திருத்தணி ரயில்வே சுரங்கப் பாதையினை நகராட்சி துப்புரவு பணியாளர்கள் சுத்தம் செய்தனர்.

Update: 2021-05-21 14:53 GMT

திருத்தணி ரயில்வே சுரங்க பாதையை சுத்தம் செய்யும் பணி.

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணியில் சதாசிவம் லிங்கேஸ்வரர் கோவில் எதிரே ரயில்வே கேட்டினை கடப்பதற்காக சுரங்கப் பாதை அமைக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டுகளாக பராமரிப்பின்றி கிடக்கும் இந்த பாதையினை திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் திருத்தணி எஸ். சந்திரனிடம் மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இதனை ஏற்று அவர், திருத்தணி நகராட்சி நிர்வாகத்திடம் உடனடியாக துப்புரவு செய்யுமாறு பணிந்தார். இதனை ஏற்ற நகராட்சி நிர்வாக ஊழியர்கள் ரயில்வே சுரங்கப் பாதையினை துப்புரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News