பள்ளிப்பட்டில் பூஜை செய்து தங்க நகை நூதன மோசடி: ஜோதிடர் கைது

பள்ளிப்பட்டில் பூஜை செய்து தங்க நகை நூதன மோசடியில் ஈடுபட்ட ஜோதிடர் கைது செய்யப்பட்டார்.;

Update: 2022-09-12 03:15 GMT

கைது செய்யப்பட்ட ஜோதிடர்.

திருவள்ளூர் மாவட்டம், ஆந்திர எல்லைப் பகுதியில் அமைந்துள்ள பள்ளிப்பட்டில் வாடகைக்கு வீடு எடுத்து ஜோதிடம் பார்த்து வந்துள்ளார்.

இந்நிலையில், அவரிடம் ஜோதிடம் பார்த்துக்கொள்ள பள்ளிப்பட்டு சேர்ந்த ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் ரவீந்திரபாபு கடந்த சில தினங்களுக்கு முன் சென்றுள்ளார். வீட்டில் அஷ்ட ஐஸ்வர்யங்கள் கிடைக்க சுமங்களி தங்க தாலி சரடு அணிவித்து லட்சுமி தேவிக்கு பூஜைகள் செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

ஜோதிடர் பேச்சை நம்பி அவர் மனைவி அணிந்துருந்த மூன்று சவரன் தங்க தாலி சரடு கொண்டு சென்று ஜோதிடரிடம் வழங்கியுள்ளார். தாலி சரடு லட்சுமி தேவி படத்திற்கு அணிவித்து இரண்டு நாட்கள் பூஜை செய்து விட்டு தருவதாக கூறி அனுப்பிவைத்துள்ளார்.

இரண்டு நாள் கடந்த நிலையில் ஜோதிட நிலையம் திறக்கப்பாடதால் பள்ளிப்பட்டு காவல் நிலையத்தில் புகார் செய்தார். சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் கோபால் வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோதிட நிலையத்தில் பொருட்கள் எடுத்துக்கொண்டு சென்றபோது பேருந்து நிலையத்தில் கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

அவரிடமிருந்து மூன்று சவரன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட டுபாகூர் ஜோதிடரை நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி திருத்தணி கிளை சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News