தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் மகள் தூக்கிட்டு தற்கொலை: போலீஸ் விசாரணை

கங்கோத்திரி தனது தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் நீண்ட நாளாக மன உளைச்சல் இருந்தாராம்

Update: 2022-08-03 09:45 GMT

பைல் படம்

திருவள்ளூர் மாவட்டம், ராமாநாயுடு கண்டிகை கிராமத்தில் குடும்பத்துடன் வசித்து வந்தவர் தாமு.இவரது மனைவி ராஜேஸ்வரி. இந்த தம்பதிகளுக்கு நான்கு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில் கடந்த வருடம் கொரோனா தொற்று ஏற்பட்டு ராஜேஸ்வரி உயிரிழந்தார் . இவர்களது மகள் கங்கோத்திரி (13) அங்குள்ள பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார். இதனை அடுத்து கங்கோத்திரி தனது தாய் இறந்த துக்கம் தாங்க முடியாமல் நீண்ட நாளாக மன உளைச்சல் இருந்தாராம்

இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் மாணவியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தாய் இறந்த துக்கத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


Tags:    

Similar News