கும்மிடிப்பூண்டியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் தொடர்பாக இருவர் கைது

கும்மிடிப்பூண்டியில் 10 கிலோ கஞ்சா பறிமுதல் தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2022-08-19 04:45 GMT

ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கஞ்சா கடத்துவதாக திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் செபாஸ் கல்யாணுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின் பேரில் கும்மிடிப்பூண்டி தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் மற்றும் போலீசார் கும்மிடிப்பூண்டி சுற்றுவட்டார பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது எளாவூர் ஒருங்கிணைந்த சோதனை சாவடியில் சோதனை மேற்கொண்டிருந்தபோது. அப்போது ஆந்திரா அரசு பதிவு கொண்ட நெல்லூரில் இருந்து சென்னை செல்லும் பேருந்துகளில் சோதனை செய்தபோது. சுமார் 10 கிலோ கஞ்சா இருந்து தெரியவந்தது. அப்போது இருவர் சந்தேகப்படும்படி இருந்தனர்.

அவர்களை கைது செய்து ஆரம்பாக்கம் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நீதிராஜன்(50),நாகர்கோயில் மாவட்டத்தை சேர்ந்த அமோஸ்கான் மோசஸ் ஆல்பாட்ராஜ்(26) என தெரியவந்தது.பின்னர் ஆரம்பாக்கம் போலீசார் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி பின்னர் சிறையில் அடைத்தனர்.

Tags:    

Similar News