திருவள்ளூர் அருகே லாரி என்ஜினில் தீ விபத்து: போலீசார் விசாரணை

கண்டிகை அருகே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கண்டெய்னர் லாரியில் திடீரென ஏற்பட்ட தீ விபத்து குறித்து போலீசார் விசாரணை.

Update: 2023-03-10 05:30 GMT

 தீப்பிடித்து எரியும் லாரி. 

திருவள்ளூர் அடுத்த வெங்கத்தூர் கண்டிகை பகுதியில் சென்னை-திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைமை அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு இன்று மதியம் காணொளி காட்சி மூலம் திறக்கப்பட்டது. இந்நிலையில் பாஜக அலுவலகம் அருகிலேயே சாலை ஓரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த லாரி நேற்று நள்ளரிவில் திடீரென என்ஜினில் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மணவாளநகர் போலீசார் மற்றும் திருவூர் தீயணைப்புத் துறையினர் சுமார் அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். அதற்குள் என்ஜினின் முன்பக்கம் முழுவதும் எரிந்து சேதமானது. இதனையடுத்து பாரதிய ஜனதா கட்சியின் அலுவலகம் இன்று திறக்க உள்ள நிலையில் சாலை ஓரத்தில் அலுவலகம் அருகே நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியின் முன் பகுதியில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

லாரி எஞ்சின் கோளாறு காரணமாக தீப்பற்றி எரிந்ததா அல்லது மர்ம நபர்கள் யாரேனும் தீயிட்டு கொளுத்தினார்களா என்ற கோணத்தில் மணவாளநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News