திருவள்ளூரில் ஒரே நாளில் 735 பேருக்கு கொரோனா: 17 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நாளில் 735 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல் தெரிவித்ததுள்ளது.

Update: 2021-06-02 15:30 GMT

தமிழகத்தில் கொரோனா இரண்டாவது அலை காரணமாக தொற்று மதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. தற்போது தளர்வுகளற்ற முழு ஊரடங்கு அறிவித்திருப்பதால் தொற்று பாதிப்பை விட குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வருகிறது.

இன்று ஒரே நாளில் 735 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 1055 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று 17 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 7254 ஆக உள்ளது.

மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,02,709ஆகவும், இதில் 94,028 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1427 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News