திருவள்ளூரில் இன்று 68 பேர் தொற்றில் இருந்து குணமடைந்தனர்

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரோ நாளில் மட்டும் 68 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து வீடு திரும்பினர்.

Update: 2021-08-07 00:58 GMT
பைல் படம்

திருவள்ளூரில் இன்று ஒரே நாளில் 98 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் 68 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று ஒருவர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்தார். மாவட்டத்தில் நேற்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 871 ஆக உள்ளது.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1764 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News