திருவள்ளூரில் ஒரேநாளில் 1221 பேருக்கு கொரோனா உறுதி: 24 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரே நளில் கொரோனா தொற்று பாதிப்பு 1221 பேருக்கு ஏற்பட்டுள்ளது. 24 பேர் பலியாகியுள்ளனர்.

Update: 2021-05-27 17:55 GMT

தமிழகத்தில் கொரோனா தொற்று 2வது அலை காரணமாக தொற்று பாதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வந்தது. அதன்படி ஒரே நாளில் 1221 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியானதா இதுவரை 97,556 நபர்களுக்கு தொற்று பாதிப்பு உறுதியாகியுள்ளது. ஒரே நாளில் 1987 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆனதால் இதுவரை 84,668 நபர்கள் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளதாக தெரிவித்த சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இன்று 24 நபர்கள் உயிரிழந்து இருப்பதால் திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை 1290 நபர்கள் உயிரிழந்திருப்பதாகவும் தற்போது திருவள்ளூர் மாவட்டத்தில் தோற்று பாதிப்பை விட டிஸ்சார்ஜ் அதிக அளவானதால் சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து 11,608 ஆக குறைந்ததாக சுகாதாரத் துறையினர் தெரிவிக்கின்றனர் .

Tags:    

Similar News