திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று 1181 பேருக்கு கொரோனா, 31 பேர் பலி!

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 1181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 31 பேர் இறந்துள்ளனர்.

Update: 2021-05-26 16:24 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட வர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்த நிலையில் இன்று ஒரே நாளில் 1181 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உருவாகியுள்ளது. மேலும் 1820 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இன்று 31 பேர் கொரோனாவின் காரணமாக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளின் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்களின் எண்ணிக்கை 12,355 ஆகவும் உள்ளது. மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 96,302 ஆகவும், இதில் 82,681 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1266 ஆக உள்ளது என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News