திருவள்ளூரில் அதிகரிக்கும் கொரோனா: 1207 பேருக்கு பாதிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில், நேற்று ஒரேநாளில் 1207 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Update: 2021-05-04 02:47 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப் பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது.

இது நேற்றும் தொடர்ந்தது. நேற்று ஒரேநாளில் மாவட்டத்தில் அதிகபட்சமாக 1207 ஆக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் 676 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

மாவட்டத்தில், நேற்று மட்டும் 4 பேர் கொரோனாவிற்காக உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் வீடுகளில் தனிமைப்படுத்துதல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5973 ஆக உள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 62, 504 ஆகவும், இதில் 55, 712 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்றின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 819 ஆக அதிகரித்துள்ளதாக, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Tags:    

Similar News