திருவள்ளூர்: இன்று ஒரே நாளில் 208 பேருக்கு கொரோனா
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல்.;
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 208 பேருக்கு கொரோனா தொற்று உறுதி என மாவட்ட நிர்வாகம் தகவல்.
திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாகவே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 208 பேருக்கு கொரோனா தொற்று செய்யப்பட்டுள்ளது. மேலும் 91பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இன்று வீடுகளில் தனிமைப்படுத்தல் மற்றும் மருத்துவமனை மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 1169 உள்ளது.
மேலும் மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 47,303 ஆகவும், இதில் 45,418 பேர் முழுமையாக குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 716 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.