திருவள்ளூர்: 717 பேருக்கு கொரோனா -6 பேர் பலி

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று ஒரே நாளில் 717 பேருக்கு கொரோனா தொற்று உறுதி, டிஸ்சார்ஜ் 558 என மாவட்ட நிர்வாகம் தகவல்.

Update: 2021-04-27 16:39 GMT

திருவள்ளூர் மாவட்டத்தில் கொரோனாவின் இரண்டாவது கட்ட அலையானது வெகுவாக பரவி வருகின்றது. இதன் வெளிப்பாடாக இன்று ஒரே நாளில் 717 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

மேலும் 558 பேர் கொரோனாவிலிருந்து முழுமையாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மேலும் மாவட்டத்தில் இன்று கொரோனா வின் காரணமாக 6 பேர் உயிரிழந்துள்ளனர். மாவட்டத்தில் இன்று கொரோனாவின் காரணமாக மருத்துவ மனை மற்றும் வீடுகளின் தனிமைப்படுத்துதல் மூலமாக சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 5407 ஆக அதிகரித்துள்ளது. மாவட்டத்தில் இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை 57, 189 ஆகவும், இதில் 51, 011 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினார். மாவட்டத்தில் இதுவரை கொரோனாவிற்காக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 771 என மாவட்ட நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

Tags:    

Similar News