திருவள்ளூர் பா.ஜ.க. வேட்பாளருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு

திருவள்ளூர் நாடாளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் பொன் பால கணபதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

Update: 2024-04-10 00:25 GMT

திருவள்ளூர் பாஜக வேட்பாளர் பொன் பால கணபதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து வரவேற்பு அளித்தனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதியில் போட்டியிடும் பாஜக கட்சி வேட்பாளர் பொன், பாலகணபதிக்கு பெண்கள் ஆரத்தி எடுத்து மாலை அணிவித்து பட்டாசுகள் வெடித்து உற்சாக வரவேற்பு அளித்தனர்.

திருவள்ளூர் நாடாளுமன்ற தனித் தொகுதிக்கு உட்பட்ட கடம்பத்தூர், புதுமாவிலங்கை, செஞ்சி, விடையூர்,காரணி, திருப்பாச்சூர், சேலை, திருவள்ளூர் ரயில் நிலையம், உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் பாஜக வேட்பாளர் பொன்.பாலகணபதி கூட்டணி கட்சி நிர்வாகிகளுடன் சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

அப்பொழுது பொதுமக்களிடையே பேசிய அவர் தமிழ்நாட்டில் 5 லட்சம் கோடிக்கு மேலாக ஏழை எளிய மக்களுக்கு நலதட்ட உதவிகளை வழங்கியவர் நம் பாரத பிரதமர் மோடி அரசு தான் எனவும், என்னை வெற்றி பெற செய்தால் வீட்டுமனை பட்டா இல்லாதவர்களுக்கு இலவச வீட்டுமனை பட்டா பெற்று தருவதாகவும், வேலை இல்லாத படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு ஏற்படுத்திக் தருவதாக தேர்தல் வாக்குறுதிகளை அளித்தும்பாஜக ஆட்சியின் கடந்த 10 ஆண்டுகளில் பொது மக்களுக்கு செய்த நலத்திட்ட பணிகளை குறித்து வீடுவீடாக துண்டு பிரசுரங்களை வழங்கியும் வாக்குகளை சேகரித்தார்.

Tags:    

Similar News