திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை அடுத்த அரண்வாயல் குப்பம் பகுதியில் 28 வயது இளம் பெண் மயங்கி விழுந்தவர் திடீரென உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அரண்வாயில் குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் சேகர் (54). இவரது மகள் தேன்மொழி இவருக்கும் பாபு என்பவருக்கும் திருமணமாகியுள்ளது.
இந்நிலையில் கடந்த 9.5.21 அன்று அரண்வாயில் குப்பத்தில் அவரது கணவர் வீட்டில் இருந்தபோது தேன்மொழி திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். இதனையடுத்து உடனடியாக அவரது குடும்பத்தார் திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து சேர்த்துள்ளனர்.
அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் தேன்மொழி ஏற்கனவே உயிரிழந்ததாக தெரிவித்ததால் அதிர்ச்சி அடைந்துள்ளனர். எனவே இதுகுறித்து செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
28 வயது இளம் பெண் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.