526 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்கள்: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கல்
Sports Equipment Provided By Minister பாடியநல்லூர் ஊராட்சியில் நடைபெற்ற இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் 526 ஊராட்சிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.;
திருவள்ளூர் மாவட்ட பஞ்சாயத்துகளில் உள்ள விளையாட்டு வீரர்களுக்கு உபகரணங்களை வழங்கிய விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
Sports Equipment Provided By Minister
விளையாட்டு துறை நகரங்களில் தேங்கி விடக்கூடாது, கிராமங்களிலும் தொடர வேண்டும் என கலைஞர் விளையாட்டு உபசாரங்கள் வழங்குவதாகவும், இதுவரையில் வழங்கப்பட்டதில் திருவள்ளூர் மாவட்டத்தில் தான் அதிக எண்ணிக்கையில் உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன எனவும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
திருவள்ளூர் மாவட்டம், செங்குன்றம் அடுத்த பாடியநல்லூரில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை சார்பில் 526 ஊராட்சிகளுக்கும் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது.இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டு 33 வகையான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.அப்போது திருவள்ளூர் மாவட்டத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் தனுஷ் மற்றும் துப்பாக்கி சுடுதல் ஜூனியர் உலக சாம்பியன் கார்த்திக் சபரிராஜ் ஆகியோரை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மேடையில் கௌரவித்தார்.அப்போது பேசிய அமைச்சர் உதயநிதி, கேலோ இந்தியா போட்டியில் 38 தங்கம், 21 வெள்ளி 30 வெண்கலம் என 98 பதக்கங்கள் பெற்று பதக்கப்பட்டியலில் தமிழகம் 2-வது இடம் பிடித்துள்ளது எனவும், விரைவில் முதலிடம் பிடிப்போம் எனவும் தெரிவித்தார்.
300-க்கும் மேற்பட்ட வீரர்களுக்கு 14 கோடி உயரிய ஊக்கதொகை வழங்கப்பட்டது.இந்தியாவில் விளையாட்டு துறை என்றால் தமிழ்நாடு என்ற வகையில் புதுப்புது முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் எனவும்,திருவள்ளூர் மாவட்டத்தில் பளு தூக்கும் வீரர் தனுஷ், துப்பாக்கி சுடும் போட்டியில் வெற்றி பெற்ற கார்த்திக் சபரிராஜ் ஆகியோர் மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள் எனவும்,விளையாட்டு துறை நகரங்களில் தேங்கி விடக்கூடாது, கிராமங்களிலும் தொடர வேண்டும் என கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்குவதாகவும்,
விளையாட்டு வீரனுக்கு தேவையான அனைத்தும் கருணாநிதிக்கு பிறவியிலேயே இருந்தது எனவும்,கருணாநிதிக்கு ஷார்ப் மைண்ட், அவருக்கு நிகர் அவரே தான் எனவும்,இளம் வயதிலேயே விளையாடியவர் கருணாநிதி எனவும், பிற்காலத்தில் ஆடுகளத்தில் விளையாடவில்லை என்றாலும், விளையாட்டு வீரருக்கு தேவையான தோல்வியில் துவண்டு விடாமை, முயற்சி என அனைத்தும் கருணாநிதிக்கு இருந்தது எனவும் தெரிவித்தார்.எதிரணி எப்படி விளையாடுவார்கள் என்பதை கணித்து விளையாடுவதுயாராலும் வீழ்த்த முடியாத வீரராக கருணாநிதி இருந்தார்,அதனால் தான் "கலைஞர் SPORTS KIT" என பெயரிப்பட்டது எனவும் அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
Sports Equipment Provided By Minister
விளையாட்டு வீரர்களுக்கு விளையாட்டு உபகரணங்களை வழங்கிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
மன திடம் இருந்தால் தான் விளையாட்டில் வெற்றி பெற முடியும் எனவும்,யாராலும் எப்போதும் வீழ்த்த முடியாதவர் கருணாநிதி எனவும் தெரிவித்த அவர்,நீண்ட தூரம் ஓடினால் தான் அதிக உயரம் தாண்ட முடியும் என கருணாநிதி கூறியதாகவும் அவர் கூறினார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் காந்தி, சட்டமன்ற உறுப்பினர்கள் ஆவடி நாசர், மாதவரம் சுதர்சனம், . கிருஷ்ணசாமி, கோவிந்தராஜன்,ராஜேந்திரன், மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர், ஆகியோர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.