திருவள்ளூரில் ஆட்டோ - லாரி மோதிய விபத்தில் பெண் பலி: 5 பேர் படுகாயம்

திருவள்ளூர் அருகே ஆட்டோ - லாரி மோதிய விபத்தில் பெண் பலியானார்; 5 பேர் படுகாயம் அடைந்தனர்.

Update: 2022-03-30 03:15 GMT

விபத்துக்குள்ளான ஆட்டோ

மகாராஷ்டிரா மாநிலம் சோலாப்பூர் மாவட்டம் துளசி அனுமான்வாடி கிராமத்தை சேர்ந்தவர் ஞானேஸ்வர்(25). லாரி ஓட்டுநர். இவர், ஊத்துக்கோட்டையை நோக்கி லாரியை ஓட்டி வந்தார். சீத்தஞ்சேரி கூட்டுசாலையில் வந்தபோது எதிரே, திருவள்ளூர் நோக்கி வந்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த கலையரசன் என்பவர் ஓட்டி வந்த ஆட்டோ மீது லாரி மோதியது.

இதில், ஆட்டோவில் பயணம் செய்து வந்த நெல்வாய் கிராமத்தை சேர்ந்த ஜோதி (40) என்பவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். ஆட்டோவில் பயணம் செய்த அதே கிராமத்தை சேர்ந்த சாரதாம்பாள் (65), பொம்மி (60), வைஜெயந்தி மாலா (50), உஷா ராணி (55), சரஸ்வதி (65) ஆகிய ஐந்து பெண்கள் படுகாயமடைந்தனர். தகவலறிந்த பென்னலூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று ஜோதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தபர்.

படுகாயமடைந்த 5 பெண்கள், திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து, ஊத்துக்கோட்டை காவல்துறை ஆய்வாளர் குமார் வழக்கு பதிந்து, லாரி டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

Tags:    

Similar News