மூன்று மணி நேரத்தில் கொலையாளிகளை கைது செய்த காவல்துறை

Crime News in Tamil -திருவள்ளூர் அருகே ரவுடியை கொலை செய்த மூன்று மணி நேரத்தில் கொலையாளிகளை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-08 08:30 GMT

மூன்று மணி நேரத்தில் கைது செய்யப்பட்ட கொலையாளிகள்

Crime News in Tamil -திருவள்ளூர் அருகே அயத்தூர் டன்லப் பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற முன்னாள் ரவுடியை சரமாரியாக வெட்டி கொலை செய்து விட்டு இருசக்கர வாகனத்தில் தப்பி ஓடிய 3 பேர் கொண்ட கும்பல்,  சிசிடிவி காட்சிகள் மூலமாக 3 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர்.

திருவள்ளூர் மாவட்டம் செவ்வாப்பேட்டை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட வேப்பம்பட்டு அண்ணா நகர் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (38). அதே பகுதியைச் சேர்ந்தவர் தேவா. இவர்கள் இருவரும் நேற்று மாலை வேப்பம்பட்டில் இருந்து அய்யத்தூர் நோக்கி டன்லப் நகர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தனர்.

அப்போது பின்னால் இரு சக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட மர்ம கும்பல் முருகேசனை கழுத்து, தலை, கை, கால் உள்ளிட்ட அனைத்து இடங்களிலும் சரமாரியாக வெட்டியது.

இதில் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து முருகேசன் உயிரிழந்தார். இதனையடுத்து அந்த 3 பேரும் அங்கிருந்து தப்பி சென்றனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆவடி சரக காவல் உதவி ஆணையர் முத்துவேல் பாண்டி மற்றும் செவ்வாப்பேட்டை ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான போலீசார் முருகேசன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இருசக்கர வாகனத்தில் வந்த அந்த மூன்று பேர் யார்? எதற்காக சரமாரியாக வெட்டி கொலை செய்தார்கள் என்பது குறித்து கொலை சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளைக் கொண்டு செவ்வாபேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் கடந்த 2020-ல் முருகேசனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த சரவணன் (23), பார்த்திபன் (22) ஆகியோருக்குமிடையே தகராறு ஏற்பட்டதாகவும், அப்போது முருகேசனை இவர்கள் இருவரும் கத்தியால் குத்த முயன்ற போது அதை பிடுங்கி சரவணன், மற்றும் பார்த்திபனை முருகேசன் குத்தியதில் அவர்கள் பலத்த காயம் அடைந்ததாகவும், அதனால் பழிக்குப் பழியாக இந்த கொலை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதில் சரவணன், பார்த்திபன் மற்றும் இவர்களது கூட்டாளியான திருவள்ளூர் நகராட்சிக்குட்பட்ட எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த வினோத்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து இந்த கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

இதனையடுத்து 3 பேரையும் தனிப்படை போலீசார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர் கொலை நடந்த மூன்று மணி நேரத்தில் சிசிடிவி காட்சிகள் உதவிகளுடன் குற்றவாளிகளை கைது செய்த ஆய்வாளர் பாஸ்கருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. மேலும் இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2 

Tags:    

Similar News