திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் கிராம மக்கள் போட்ட மனு

தொழுவூர்ஊராட்சியில் புள்ள பூங்காவை சீர் செய்யக்கோரி கிராம மக்கள் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

Update: 2024-04-17 05:38 GMT

திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக புகார் பெட்டியில் மனு போட்ட இளைஞர்.

திருவள்ளூர் அருகே அரசு மண் குவாரியில் இருந்து ஊராட்சி பூங்காவிற்கு சவுடு மண் வழங்கி பூங்காவை சீர் செய்ய வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் பெட்டியில் பொது மக்கள் மனு அளித்தனர்.

திருவள்ளூர் மாவட்டம், தொழுவூர் ஊராட்சியில் சுமார் 3.ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர் இந்த ஊராட்சிக்குட்பட்ட லட்சுமி நகரில் அம்மா விளையாட்டு பூங்கா அமைந்துள்ளது.


இந்த பூங்காவை தொழுவூர் கிராம பொதுமக்கள் மட்டுமல்லாமல் அருகில் உள்ள கிராம மக்களும் தினந்தோறும் பயன்படுத்தி வருகின்றனர். இங்கே சிறு பிள்ளைகள் விளையாடுவதற்கு வாலிபால்கள் திடல், இளைஞர்கள் உடற்பயிற்சி செய்வதற்கு பெரியோர்கள் நடைபயிற்சி செய்வதற்கும், கராத்தே  மற்றும் யோகா வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மழைக்காலங்களில் மழை நீர் தேங்குவதால் பொதுமக்கள் பூங்காவை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டு வருவதாகவும் பூங்காவில் தேங்கி நிற்கும் தண்ணீரால் கொசுக்கள் உற்பத்தியாகி அவை கடிப்பதால் டெங்கு, மர்ம காய்ச்சல் போன்ற நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளதால்

இந்த விளையாட்டுப் பூங்காவை உடனடியாக சீரமைத்து தருமாறு சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடமும் அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்தும் தற்போது வரை எவ்வித நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில் 100  க்கும் மேற்பட்ட தொழுவூர் கிராம பொதுமக்கள் ஒன்று கூடி திருவள்ளுவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வந்தனர். அங்கு வைக்கப்பட்டுள்ள புகார் பெட்டியில் அவர்கள் தங்களது கிராமத்தில் உள்ள பூங்காவை சீர் செய்து தர வேண்டும் என கோரி எழுதப்பட்டு இருந்த மனுவை போட்டுவிட்டு சென்றனர்.

Tags:    

Similar News