பாடியநல்லூரில் கொரோனாவுக்கு பெண் திடீர் மரணம்: போலீசார் விசாரணை

பாடியநல்லூரில் கொரோனா தொற்று ஏற்பட்ட பெண் வழியிலேயே இறந்ததாக கூறப்பட்டது. இதுபற்றி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Update: 2021-05-16 05:50 GMT

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அடுத்த பாடியநல்லூர் மருது பாண்டியன் நகரைச் சேர்ந்த கணேசன் என்பவரின் மனைவி கற்பகம் (52)  என்பவர் மூச்சு விடுவதற்கு சிரமமாக உள்ளதாக கூறியுள்ளார். உடனே கணேசன் தனது மனைவி கற்பகத்தை சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அழைத்துச் சென்றுள்ளார்.

அங்கு பரிசோதனை செய்த மருத்துவர்கள் கற்பகம் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். மேலும் அவருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இச்சம்பவம் குறித்து சோழவரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

Similar News