ஆரணி அருகே வயிற்று வலி காரணமாக வடமாநில பெண் தூக்கிட்டு தற்கொலை
ஆரணி அருகே செங்கல் சூளையில் வயிற்று வலி காரணமாக வட மாநில கூலி தொழிலாளி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.;
ஆரணி அருகே தனியார் செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணியாற்றி வந்த வடமாநில பெண் தொழிலாளி வயிற்று வலி காரணமாக தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது பற்றி ஆரணி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி தொகுதி ஆரணி அடுத்த பனப்பாக்கம் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த செங்கற்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் 50-க்கும் மேற்பட்ட வடமாநிலங்களை சேர்ந்த தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி பணியாற்றி வருகின்றனர்.
இதில் ஓடிசா மாநிலத்தைச் சேர்ந்த அமித் குமார்(36). என்பவர் பிஸ்மிதா பத்ரா(32) என்ற மனைவி மற்றும் இரண்டு மகனுடன் செங்கல் சூளையில் தங்கி வேலை பார்த்து வருகிறார்.
இந்த நிலையில் அவரது மனைவி பிஸ்மிதா பத்ரா கடந்த சில நாட்களாக தீராத வயிற்று வலியில் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை கணவர் அமித் பத்ரா வீட்டில் இல்லாத நேரத்தில் வயிற்று வலி அதிகமானதால் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் கொடுத்த தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆரணி போலீசார் மயங்கிய நிலையில் இருந்தவரை மீட்டு பொன்னேரி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே வரும் வழியிலே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக ஆரணி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வயிற்று வலி காரணமாக வடமாநில கூலித் தொழிலாளி பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.