கடம்பத்தூரில் மதுபானக் கடை சுவற்றில் துளையிட்டு மதுபாட்டில்கள், பணம் கொள்ளை
கடம்பத்தூரில் அரசு டாஸ்மாக் மதுபான கடையில் சுவற்றில் துளையிட்டு மது பாட்டில் மற்றும் பணம் கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.;
கடம்பத்தூரில் மதுபான கடை சுவற்றில் துளையிட்டு மதுபான பாட்டில்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டது.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூரில் அரசு டாஸ்மாக் கடையின் சுவற்றை துளையிட்டு மதுபானங்கள், பணம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. ஆனால் மதுபானங்கள் மற்றும் பணம் எவ்வளவு திருடு போனது குறித்து தகவல் அளிக்க டாஸ்மாக் நிர்வாகம் மறுக்கிறது.
திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் வெண்மனம்புதூர் சூர்யா நகர் பகுதியில் அரசு மதுபான கடை இயங்கி வருகிறது, இக்கடை அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பகல் 12 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 10 மணி வரை அரசு மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
இந்த சூழலில் நேற்று இரவு வழக்கம் போல் டாஸ்மாக் கடை ஊழியர்கள் இரவு 10 மணி அளவில் விற்பனை முடிந்து கடையை மூடி சென்ற நிலையில் இன்று காலை வந்து பார்த்த பொழுது டாஸ்மாக் கடையில் சுவற்றை துளையிட்டு மர்ம நபர்கள் பணம் மற்றும் மதுபானத்தை திருடிச் சென்றுள்ளது கண்டு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
இது குறித்து கடம்பத்தூர் காவல்துறையினருக்கு தகவல் அளித்தனர். தகவலின் அடிப்படையில் விரைந்து வந்த போலீசார் சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் டாஸ்மாக் கடையின் சுவரை துளையிட்டு மர்ம நபர்கள் உள்ளே வந்தது கண்டறியப்பட்டுள்ள நிலையில் டாஸ்மாக் கடையிலிருந்து பணம் மற்றும் மதுபானங்கள் எவ்வளவு திருடுபோனது என்பது குறித்து தகவல் அளிக்க டாஸ்மாக் நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும் அங்குள்ள சிசிடிவியில் பதிவான காட்சிகளைக் கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.