100 சதவீத வாக்களிப்பை வலியுறுத்தி கோலப் போட்டி, விழிப்புணர்வு பேரணி

100%வாக்குப்பதிவை வலியுறுத்தி கோலப்போட்டி கையெழுத்து இயக்கம் மற்றும் பேரணியை மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் பார்வையிட்டு துவக்கி வைத்தார்.

Update: 2024-03-23 04:30 GMT

விழிப்புணர்வு பேரணியை கொடியசைத்து துவக்கி வைத்த ஆட்சியர்

திருவள்ளுர் மாவட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித்துறை அலுவலகத்தில் மக்களவைத் தேர்தலை முன்னிட்டு மகளிர் சுய உதவிக் குழுக்கள் சார்பில் 100% வாக்களிப்பதன் அவசியம் குறித்த கோலப் போட்டியினை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சித் தலைவருமான டாக்டர் பிரபுசங்கர் பார்வையிட்டு தேர்தல் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார்.


இந்த பேரணியானது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் மக்களவைப் பொதுத் தேர்தல்-2024 முன்னிட்டு தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்கள் சார்பில் தேர்தல் விழிப்புணர்வு பேரணி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் இருந்து திருப்பதி தேசிய நெடுஞ்சாலை வழியாக காமராஜர் சிலை வரை சென்று முடிவடைந்தது.

50க்கும் மேற்பட்ட மகளிர் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியில் பணம் வாங்காமல் நேர்மையாக வாக்களிப்போம், எனது வாக்கு எனது எதிர்காலம், வாக்களிப்பதில் பெருமை கொள்வோம், இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம், எனது வாக்கு எனது உரிமை, தவறாமல் வாக்களிப்பது வாக்காளர் கடமை, நமது இலக்கு 100 % சதவீதம் வாக்குப்பதிவு , தேர்தல் திருவிழா தேசத்தின் பெருவிழா, ஓட்டுக்கு வாங்க மாட்டோம் நோட்டு என்ற பதாகைகளை ஏந்தி பொது மக்களுக்கு தேர்தல் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஊர்வலமாக சென்றனர்.

இந்நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலர் இராஜ்குமார், கூடுதல் ஆட்சியர் வளர்ச்சி மரு. சுகபுத்ரா, மகளிர் திட்ட இயக்குனர் திருமதி. செல்வராணி, உதவி திட்ட அலுவலர் திருமதி. கிறிஸ்டி, மற்றும் மகளிர் சுய உதவி குழுக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News