பேரறிவாளனை விடுதலையை கண்டித்து திருவள்ளூரில் நூதன முறையில் போராட்டம்

பேரறிவாளனை விடுதலையை கண்டித்து திருவள்ளூரில் காங்கிரசார் நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.

Update: 2022-05-20 01:30 GMT

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது.

இதையடுத்து திருவள்ளூர் காங்கிரஸ் கட்சியினர் மன உணர்வை வெளிப்படுத்தும் வகையில் திருவள்ளூர் வடக்கு மாவட்டத் தலைவர் ஏ.ஜி.சிதம்பரம் தலைமையில் திரளான கட்சி நிர்வாகிகள் வெள்ளைத் துணியால் வாயை கட்டிக் கொண்டு அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Tags:    

Similar News